Friday, November 19, 2010

வெளிச்சம் அற்ற இருட்டு

இருட்டு
எனக்கு 
இஷ்டமாய்
விடியலுக்கான
வழியாய் இருந்தது

இருளில்
எஞ்சும்
வெளிச்சம்
பற்றிய
நினைவுகளில்
வெப்பம்
இருக்கவில்லை

வண்ணங்களினதும்
காட்சிப்பொருட்களினதும்
நினைவுத்தோற்றங்களில்
விளிம்புகள்
கரைந்து போயிருந்தன
மனிதர்கள்
தோலற்றுப்போயிருந்தார்கள்


இருள்
எல்லையற்றிருந்தது

அழகானவை
அசிங்கம்
ஒளி பட்டுத்தெறித்து
பிரகாசிப்பவை
அழுது வடிபவை
என்றெல்லா
வெளிச்சத்தின்
இருண்ட
பேதங்களுமற்று
மனம் ஒளிரும்
என்றுதான்
எண்ணியிருந்தேன்

மிருதுவானவை
வழுவழுப்பானவை
குளிர்ச்சியானவை
சுகந்தமானவை..
.............................

ஒரு
கடற்சிலந்தியைப்போல
துவாரங்களின் வழியே
தன்கரங்களைநீட்டி
இருளை
உறிஞ்சிக்கொண்டே
இருக்கின்றது
மனசு!


6 comments:

natbas said...

என்னமோ சொல்றீங்க, கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...

மொத்தத்தில இந்த நவீன கவிதை நல்லா வந்திருக்கு, நன்றி டாக்டர்.

VELU.G said...

//
இருள்
எல்லையற்றிருந்தது
//

உண்மை

நல்ல கவிதை

வரசித்தன் said...

@நட்பாஸ்

நன்றி
என்னமோ பேத்துகிறேன் விடுங்க :)

@வேலுஜி

கருத்துக்கு நன்றி

natbas said...

அதெப்படிங்க பேத்தல்னு அப்படியே விட்டுட முடியும்?

ஏதோ விஷயம் இருக்கு. என் மரமண்டைக்குதான் புரிய மாட்டேங்குது :(

வரசித்தன் said...

@நட்பாஸ்

பேத்தலை விடத்தானே வேண்டும் :)

natbas said...

@வரசித்தன் ஒரு இதுக்கு புரியலை என்று சொன்னால் நீங்களே பேத்தல் என்று சொன்னால் எப்படி!

இதில் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து குறைந்தது ஐநூறு சொற்களாவது எழுத முடியும். அப்படியும் இதன் பொருளை முழுமையாய் விளக்க முடியாது.

நிச்சயமாக நல்ல கவிதைதான். அதை வாசகனின் அனுபவத்துக்கே தற்போதைக்கு விட்டு விடுகிறேன் :)