Friday, April 22, 2011

இன்னும் இருந்துகொண்டேயிருக்கிறது ..இல்லை!


இதுவரை
நடந்ததெல்லாம்.. 
சொல்லும் சாட்சியாக
யாரும்
துணியவுமில்லை

இருந்து,
இல்லாமல்போன,
அடையாளம் எதையும்
விட்டுச்செல்லவுமில்லை.. அது.

திட்டமிட்ட
ஒரு அமாவாசை நாளின்
தீர்மானத்தினால்
இல்லை
என்றாகிவிட்டிருந்தது
நிலவு!

ஆயினும் 
இதோ
வெளிப்பட்டு
வளர்ந்துகொண்டேயிருக்கிறது!.

தேய்வதற்கும்,
மறைவதற்கும்,
வளர்வதற்கும்,
அப்பால்…

எப்போதும்,
நிலவுகிறது
உண்மை!


2 comments:

natbas said...

உண்மை.

A doctor said...

@நட்பாஸ்

:)