இதுவரை
நடந்ததெல்லாம்..
சொல்லும் சாட்சியாக
யாரும்
துணியவுமில்லை
இருந்து,
இல்லாமல்போன,
அடையாளம் எதையும்
விட்டுச்செல்லவுமில்லை.. அது.
திட்டமிட்ட
ஒரு அமாவாசை நாளின்
தீர்மானத்தினால்
இல்லை
என்றாகிவிட்டிருந்தது
நிலவு!
இதோ
வெளிப்பட்டு
வளர்ந்துகொண்டேயிருக்கிறது!.
தேய்வதற்கும்,
மறைவதற்கும்,
வளர்வதற்கும்,
அப்பால்…
எப்போதும்,
நிலவுகிறது
உண்மை!
2 comments:
உண்மை.
@நட்பாஸ்
:)
Post a Comment